நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரசன்னாவை 17 ஆண்டுகள் ஆகியும் போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை: தாயார் இந்திரா காந்தி ஏமாற்றம்

ஈப்போ:

என் மகள் பிரசன்னாவை 17 ஆண்டுகள் ஆகியும் போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது எனக்கு ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என்று தாயார் இந்திரா காந்தி கூறினார்.

இந்திரா காந்தி என்ற பெண்மணி தனது மகள் பிரசானா திக்சாவை மீட்க 17 ஆண்டுகால போராட்டத்தை நடத்தி வருகிறார்.

அவரது மகள் 2009ஆம் ஆண்டு அவரது முன்னாள் கணவர் முகம்மது ரிதுவான் அப்துல்லாவால் கொண்டுச் செல்லப்பட்டார்

இந்திரா காந்தி தனது மகளை மீட்க காவல்துறை, நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்திடம் பலமுறை முறையீடு செய்துள்ளார்.

அவர் தனது போராட்டத்திற்காக பல ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளார்.

இந்த வழக்கு மலேசியாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணக்கு வந்தபோது இன்னமும் போலிசாரால் தேட்பட்டு வரும் அவரது முன்னாள் கணவர் முகம்மது ரிதுவான் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை தொடர்ந்து பல நடவடிக்கைகைளை எடுத்து வருவதாக போலிஸ் தரப்பில் கூறியது இந்திரா காந்திக்கு பெரும் ஏமாற்றத்தை அளிதுள்ளது.

இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் 25 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset