நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாப்பிங் சென்ற இடத்தில் சிக்கிய 21 அந்நியர்கள் 

சுங்கை பட்டானி: 

ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள பேரங்காடி ஒன்றில் 'ஒப் கூத்திப்' அமலாக்க நடவடிக்கையில் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வார இறுதி விடுமுறையை கழிப்பதற்கான அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் போனது.

கெடா மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் முஹம்மத் ரிட்ஸுவான் முஹம்மத் ஜைன், முறையான பயண ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 1959/63 ஆம் ஆண்டின் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மதியம் 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், 127 வெளிநாட்டவர்கள் அமலாக்க அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

"சோதனை செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் சிலர், அதிகாரிகள் இருப்பதை உணர்ந்தவுடன் தப்பி ஓட முயன்றனர்.

"எவ்வாறாயினும், நடவடிக்கைப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, பணியில் இருந்த அதிகாரிகளால் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டதால், அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன" என்று அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

குறிப்பாக வார இறுதி நாட்களில், வெளிநாட்டவர்களின் இருப்பு பார்வையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் முறையிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

சட்டவிரோத குடியேறிகளைக் (PATI) கட்டுப்படுத்தும் பொருட்டு, மாநிலம் முழுவதும் தனது நடவடிக்கைகளையும் அவ்வப்போதைய சோதனைகளையும் குடிநுழைவுத் துறை தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"எவ்வாறாயினும், அனைத்து வெளிநாட்டவர்களும் சட்டவிரோத குடியேறிகள் அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும். சோதனை செய்யப்பட்ட 127 நபர்களில், 21 பேர் மட்டுமே சட்டத்தின் விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset