நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாய்ம்மின் மகன் வாக்குமூலம் அளிக்க எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்தார்

புத்ராஜெயா:

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடினின் மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று இங்குள்ள அதன் தலைமையகத்தில் ஆஜரானார்.

சமீபத்தில் எம்ஏசிசி அலுவலகத்தில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து,

அஸ்னிடா ஒரு வழக்கறிஞருடன் காலை 9.50 மணிக்கு எம்ஏசிசி தலைமையக வளாகத்திற்கு வந்தடைந்தார்.

இருப்பினும் அவரின் மற்ற மூன்று பிள்ளைகளான முகமது வீரா டானி, முகமது அமீர் ஜைனுடின் மற்றும் முகமது அமீன் ஜைனுடின் ஆகியோர் இன்று மதியம் 12.30 மணி நிலவரப்படி எம்ஏசிசி தலைமையகத்திற்கு இன்னும் வந்து சேரவில்லை.

முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்குப் பதிலளிக்கத் தவறியதாலும், அவற்றைப் பின்பற்றாததாலும், துன் டைமின் நான்கு பிள்ளைகளுக்கு எதிராக பிப்ரவரி 28 அன்று எம்ஏசிசி தனிநபர் பாதிப்பு அறிவிப்புகளை வெளியிட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset