நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகாராஷ்டிராவில் ரவுடிகள் அட்டகாசம்: 15 நிமிடங்களில் 3 உயிர்கள் பறிப்பு

சத்ரபதி சம்பாஜிநகர்:

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒருவரை வெட்டியது உட்பட மொத்தம் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில், ஒரு வணிக வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சாய் லாலா, அரிஜித் சிங் தலைமையிலான இரு எதிரெதிர் கும்பல்கள், கத்திகள், வாள்களுடன் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அரிஜித் சிங், முஹம்மத் அற்பாஸ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த மோதலில் பலத்த காயமடைந்த சையத் அவேஸ் என்பவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிலைமை இன்னும் மோசமாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவேஸை, உயிரிழந்த அரிஜித்தின் சகோதரர் பிரதீப், அவரது கூட்டாளிகள் மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து மீண்டும் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.

மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே நடந்த இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கும்பல் மோதல் தொடர்பாக இதுவரை 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அபினாஷ் குமார் தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனை மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset