நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொகுதி தலைவர் பதவி என்பது பொதுத் தேர்தலில் வேட்பாளராவதற்கு உத்தரவாதம் அல்ல: டத்தோஸ்ரீ அன்வார்

ஜொகூர்பாரு:

கெஅடிலான் கட்சியின் தொகுதி தலைவர் பதவி என்பது பொதுத் தேர்தலில் வேட்பாளராவதற்கு உத்தரவாதம் அல்ல.

பிரதமரும் அக்கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொகுதி தலைவர், மகளிர் தலைவர் அல்லது இளைஞர் தலைவர் பதவிகளை வகிப்பது வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தானாகவே உத்தரவாதம் அளிக்காது.

தொகுதி மட்டத்தில் போதுமான பலம் இல்லாமலும், தேர்தலை எதிர்கொள்வதில் திருப்திகரமான பணித்திறனை வெளிப்படுத்தத் தவறினாலும், வேட்பாளரின் நியமனக் கடிதத்தில் தாம் கையொப்பமிட மாட்டேன்.

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய அளவுகோல்கள் அர்ப்பணிப்பு, உயர் பணி ஈடுபாடு, அடிமட்ட அளவில் உறுதியான ஆதரவின் மூலம் கட்சியை வெல்லும் தனிநபரின் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

தொகுதியில் நீங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், கோரிக்கைகளை வைக்காதீர்கள்.

மனக்கசப்பு கொள்வது, எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புவது, கட்சியை விட்டு வெளியேற விரும்புவது போன்ற பல அனுபவங்கள் எங்களுக்கு உண்டு; நாங்கள் அனைவரும் அதைக் கடந்து வந்திருக்கிறோம்.

ஆதரவின் பலமே இறுதி முடிவாகும்.

உழைத்து, கட்சியை வெல்லக்கூடியவர்களே தானாகவே வேட்பாளர்களாக ஆகிறார்கள் என்று ஜொகூர் கெஅடிலான் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset