நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காப்பார் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திர விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

காப்பார்:

காப்பார் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் உள்ள முருகன் ஆலயங்களில் பங்குனி உத்திர விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

காலை முதல் பக்தர்கள் ஆலயத்தில் கூட தொடங்கி முருகப் பெருமானை வணங்கி சென்றனர்.
அதே வேளையில் பக்தர்கள் முருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.

குறிப்பாக இவ்வாலயத்தின் ரத ஊர்வலம் மிகவும் விமரிசையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலய நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

ஆலய நிர்வாகத்தின் அவருக்கு சிறப்பு செய்தனர்.

அதிக இந்தியர்கள் வாழும் காப்பார் நகரில் பங்குனி உத்திர விழா முகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சாலை முழுவதும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் இங்குள்ள மக்கள் மற்ற இனத்தவர்களுடன் ஒற்றுமையுடன் இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.

இது தான் மலேசியர்களின் அழகு என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset