நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சுகள், அரசு நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி; ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது: பிரதமர்

புத்ராஜெயா:

அமைச்சுகள், அரசு நிறுவனங்கள்,  ஜிஎல்சி நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்து பணி புரிய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.

வரும் ஏப்ரல் 15 முதல் இது செயல்படுத்தப்படும் என்று சிறப்பு செய்தியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இது தொடர்பான மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அதே நேரத்தில், இந்த உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை மக்கள் ஆதரவு முயற்சி மூலம் தணிப்பதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை அனுமதிக்குமாறு தனியார் துறைக்கு  முன்பு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் உயர்வைச் சமாளிக்க, கருவூலம் மாதத்திற்கு 4 பில்லியன் ரிங்கிட் செலவிடும் என்று அவர்  மீண்டும் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset