நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன்95, டீசல் குறித்த புதிய கடுமையான விதிகள் இன்று நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன

கூச்சிங்: 

ரோன்95 பெட்ரோல், டீசல் விற்பனையைக் கட்டுப்படுத்தும் மூன்று புதிய கொள்கைகள் இன்று நடைமுறைக்கு வருகின்றன. இதனால் மானிய கசிவு, எரிபொருள் கடத்தலைக் குறைக்க நாடு முழுவதும் கடுமையான அமலாக்க கட்டம் தொடங்குகிறது.

செயல்படுத்தப்படும் விதிமுறைகளில் வெளிநாட்டு வாகனங்கள் ரோன்95 வாங்குவதைத் தடை செய்வதும், சுய சேவை பம்ப் முனையங்களில் சர்வதேச கடன், டெபிட் அட்டைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மானிய எரிபொருள் மலேசியர்களுக்கு மட்டுமே பயன்படுவதை உறுதிப்படுத்துகின்றன.

குறிப்பாக எல்லை பகுதிகளில் தேவை அதிகரிப்பு, கசிவு அபாயம் வளர்வதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கை செலவு அமைச்சக அமலாக்க பிரதான இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் கூறினார்.

தீவிர ரோந்துகள், மறைவான புலனாய்வு நடவடிக்கைகள், அதிக அபாயமுள்ள நிலையங்களில் சிசிடிவி  கண்காணிப்பு மூலம் பெரிய அளவில் நடத்தப்படும் ஒப் திரிஸ் 4.0, புதிய கொள்கைகளின் செயல்படுத்தல் ஆதரிக்கப்படுவதாக அவர் விளக்கினார்.

"எண்ணெய் நிறுவனங்களிடம் ஒத்துழைப்பு பெறுகிறோம். திடீரென்று விற்பனையில் உயர்வைப் பதிவு செய்யும் நிலையங்கள் குறித்து அவர்கள் தகவல் வழங்குவார்கள்.

"அங்கு எங்கள் அதிகாரிகள் சென்று நிலையமாக வரிசைப்படுத்தப்படுவார்கள். விற்பனை உண்மையில் சட்டப்பூர்வமானதா அல்லது ஏதாவது சந்தேகத்திற்குரிய நடவடிக்கை நடைபெறுகிறதா என்று காத்திருந்து கவனிப்பார்கள்" என்று இன்று பாவில் வெளிநாட்டினர் ரோன்95 வாங்குவதற்கான தடை, டீசல் நிரப்பல் வரம்பு செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

எந்தவொரு முறைகேடு அல்லது சந்தேகத்திற்குரிய நடவடிக்கை குறித்த புகார்களை வாரம் ஏழு நாட்களும் இயங்கும் அமைச்சகத்தின் நடவடிக்கை அறைக்கு நேரடியாக தெரிவிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset