நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்காசிய மோதல்: மலேசியாவின் நிலையை வலுப்படுத்த 3 துறைகளை உலக வங்கி கோடிட்டுக் காட்டுகிறது

கோலாலம்பூர்: 

மேற்காசிய மோதலால் ஏற்படும் தற்போதைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நீண்டகாலத்தில் தனது பொருளாதார நிலையை வலுப்படுத்த மலேசியா கவனம் செலுத்த வேண்டிய மூன்று முக்கிய துறைகளை உலக வங்கி கோடிட்டுக்காட்டியுள்ளது.

 தற்போதைய சூழல் மூலம் தோன்றும் "சில வாய்ப்புகளை பற்றிக்கொள்ள" இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அதே நேரத்தில் உடனடி அழுத்தங்களை நிர்வகிக்க வேண்டும் என்றும் மலேசியாவிற்கான உலக வங்கி தலைமை பொருளியலாளர் டாக்டர் அபுர்வா சாங்ஹி அரசாங்கத்திற்கு கூறினார்.

"முதல் விஷயம், திறமையான ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்துங்கள்" என்று அவர் கூறினார், மேலும் அந்த முயற்சி மின்சார வாகனங்களைத் தாண்டி புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும் சேமிப்பையும் உள்ளடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லையெனில், அது வெறுமனே எண்ணெயிலிருந்து மின்சாரத்திற்கு சிறிய மாற்றம் மட்டுமே ஆகும் என்றார் அவர்.

"இரண்டாவது, போதுமான உள்கட்டமைப்பு, இணைப்பையும் அதனை ஆதரிக்கத் தேவையான நிலையைச் சேர்ப்பதன் மூலம் மலேசியா பிராந்திய சுற்றுலா மையமாக மாறலாம்" என்று இன்று இங்கு நடைபெற்ற மலேசியா மடானி ஸ்கோலர்ஸ் ஃபோரம் தொடர் 9-ல் அவர் கூறினார்.

தொடர்ந்து, மலேசியா மூலதன ஓட்டங்களை ஈர்க்கவும் செல்வ மேலாண்மையை வளர்க்கவும் தன்னை ஒரு இடமாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு நிதி உள்கட்டமைப்பில் மேம்பாடுகள் தேவை என்றும் டாக்டர் அபுர்வா தெரிவித்தார்.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் உடனடி தாக்கங்களை நிர்வகிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் போதும் கூட, அந்தத் துறைகள் மலேசியா வளர்க்கக்கூடிய நீண்டகால வாய்ப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset