நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மோதல் மீண்டும் நிகழாது என்ற உத்தரவாதம் வேண்டும்: மஸ்வூத் பெஜேஷ்கியன்

தெஹ்ரான்: 

ஈரான் அதிபர் மஸ்வூத் பெஜேஷ்கியன் செவ்வாயன்று, ஈரான் அமெரிக்கா, இஸ்ரேலுடன் யுத்தத்தை முடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும் மோதல் மீண்டும் நிகழாது என்ற உத்தரவாதத்தை தெஹ்ரான் கோருகிறது என்று வலியுறுத்தினார்.

அமெரிக்க பங்குச் சந்தைகளுக்கு சிறிது ஆறுதல் அளித்த இந்த தலைநாட்டு அறிக்கை, ஈரானில் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்ற ஒரு நாளுக்கு பிறகும், இஸ்லாமிய புரட்சிகர காவலர்கள் படையின் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னரும் வெளியிடப்பட்டது.

"திட்டமிட்ட கொலைகள்" என்று அழைக்கப்படுவதில் அதிகமான ஈரான் தலைவர்கள் உயிரிழந்தால், புதன்கிழமை முதல் கூகுல், மேத்தா, ஏப்பல் போன்ற முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரே பழிவாங்குவதாக இஸ்லாமிய புரட்சிகர காவலர்கள் படை அச்சுறுத்தியது.

இன்டேல், டேஸ்லா, பகுப்பாய்வு நிறுவனமான பலத்திர் உட்பட 18 நிறுவனங்கள் முந்தைய கொலைகளில் கூட்டாளியாக இருந்ததாகவும், ஈரானில் ஒவ்வொரு மரணத்திற்கும் பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அலகுகள் அழிக்கப்படும் என்றும் அந்த படை கூறியது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஆகியோர் இணைந்து பிப்ரவரி 28-ல் தொடங்கிய இராணுவ நடவடிக்கையில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமெனி கொல்லப்பட்டு பிராந்தியம் முழுவதும் பதில் தாக்குதல்கள் வெடித்தன.

அதிலிருந்து வாஷிங்டனின் படை யுத்தத்தை விரிவாக்குமா அல்லது பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவருமா என்பதில் டிரம்ப் நிலையற்ற போக்கைக் காட்டினார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் நடந்த தொலைபேசி உரையாடலில் பெஜேஷ்கியன், முக்கியமான நிபந்தனைகள் குறிப்பாக ஆக்கிரமிப்பு மீண்டும் நடைபெறாது என்ற உத்தரவாதம் ஆகியவை பூர்த்தி செய்யப்பட்டால் மோதலை முடிக்க ஈரான் விருப்பம் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார்.

கடந்த வாரம் யுத்தத்தை முடிக்க அமெரிக்காவின் 15 அம்ச முன்மொழிவுக்கு பதிலாக, இஸ்ரேல், அமெரிக்கா மீண்டும் யுத்தம் தொடங்காது என்ற உத்தரவாத வழிமுறையைக் கோரி தெஹ்ரான் எதிர் முன்மொழிவைச் சமர்பித்தது.

மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளைப் பார்வையிட்ட பிறகு பேசிய பெண்டகன் தலைவர் பீட் ஹெக்சேத், வரும் நாட்கள் தீர்மானமானவை என்றும் ஈரான் இராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் திறன் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது என்றும் கூறினார்.

திங்களன்று டிரம்ப், ஈரான் ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காவிட்டால் அமெரிக்க படைகள் அனைத்து எண்ணெய் கிணறுகளையும், கார்க் தீவிலுள்ள முக்கிய ஏற்றுமதி முனையங்களையும், சாத்தியமான நீர் உப்பு நீக்கும் ஆலைகளையும் "அழிக்கும்" என்று அச்சுறுத்தினார்.

இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையின் மூலோபாய வழியில் தொடரும் தடைகளால் அமெரிக்காவில் சராசரி பெட்ரோல் விலை கேலனுக்கு AS$4-ஐ (சுமார் RM18.90) தாண்டி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் மிக உயர்ந்த அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset