நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் மிக விலையுயர்ந்த பழம்: ஜப்பானின் ஆரஞ்சு தங்கம்

ஹோக்கைடோ: 

உயர்தர பழங்களின் விரும்பிகளுக்கு யுபாரி தர்பூசணி வெறும் சாதாரண இனிப்பல்ல. அது ஜப்பானை மிக விலையுயர்ந்த பழத்தின் உற்பத்தியாளராக உலக வரைபடத்தில் வைக்கும் மதிப்பின் அடையாளமாகக் கருதப்படுகின்றது.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியில், சப்போரோ மத்திய மொத்த சந்தையில் 2025-ம் ஆண்டு பழ பருவத்தின் முதல் ஏல நிகழ்வில் ஒட்டாரு நகரிலிருந்து ஒரு உள்ளூர் தயாரிப்பு விற்பனை நிறுவனம் இரண்டு சிறந்த யுபாரி தர்பூசணிகளை ஒரு மில்லியன் யென் (சுமார் RM30,000) என்ற மிக உயர்ந்த ஏல விலையில் வாங்கியது.

யுபாரி தர்பூசணியின் பருவம் வழக்கமாக மே மாத இறுதி முதல் ஆகஸ்டு தொடக்கம் வரையிலும், ஜூன், ஜூலையில் உச்சகட்டமாக இருக்கும்.

2025-ல் மிக உயர்ந்த ஏல விலை முந்தைய ஆண்டு ஏல அமர்வில் பதிவான சாதனையைவிட இரண்டு மில்லியன் யென் குறைந்தது என்று ஜப்பான் வேளாண்மை செய்தி ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தச் சிறப்பு தன்மை, ஜப்பான் வேளாண்மை அமைச்சகம் இந்த பழத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த புவியியல் குறிப்பீடு (GI) பாதுகாப்பு அமைப்பின் கீழ் முதன்மையாக பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகளில் ஒன்றாக இதை மாற்றுகிறது.

எனினும், கடந்த ஆண்டு வானிலை காரணிகள் ஹோக்கைடோவிலுள்ள விவசாயிகளுக்கு சிறிது சவால்களை தந்தன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது மொத்த ஏற்றுமதி அளவு சிறிது குறைந்தது.

ஏப்ரல் மாதத்தில் சூரிய வெளிச்சம் குறைந்ததால் 2025 பருவத்தில் இந்தப் பழங்கள் வழக்கத்தை விட சிறியதாக இருந்ததாக ஜப்பான் வேளாண்மை செய்திகளின் அறிக்கை வெளிப்படுத்தியது.

ஆயினும், அதன் அசாதாரண விலை, தட்பவெப்ப சவால்களை எதிர்கொண்டாலும் உலகளாவிய ஆடம்பர பழ சந்தையில் யுபாரி தர்பூசணி ஹோக்கைடோவின் "ஆரஞ்சு தங்கம்" என்ற அந்தஸ்த்தை விட்டுக்கொடுக்கவில்லை.

2026 பருவத்திற்கான பழ ஏலம் வரும் ஜூனில் அதே இடத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset