நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெராவில் ஆடவரை பாராங்கத்தியால் வெட்டிய நான்கு இந்தியர்களை போலிஸ் தேடி வருகிறது

பெரா:

ஆடவர் ஒருவரை பாராங் கத்தியால் வெட்டி, பலத்த காயங்களை ஏற்படுத்திய வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இந்திய சந்தேக நபர்களை போலிஸ் தேடி வருகிறது.

பெரா மாவட்ட போலிஸ் தலைவர் சூல்கிப்லி நசீர் இதனை கூறினார்.

கடந்த மார்ச் 29 அன்று இரவு சுமார் 9.16 மணியளவில், பெராவின் திரியாங்கில் உள்ள மிங் வாங் கோபிடியம் மதுபான விடுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிறகு அனைத்து சந்தேக நபர்களும் ஒரு காரில் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

காயமடைந்த 35 வயது நபர் ஆரம்பத்தில் சிகிச்சைக்காக பெரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அவரது கடுமையான காயங்கள் காரணமாக தெமர்லோவில் உள்ள சுல்தான் ஹாஜி அகமது ஷா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் இன்னும் சுயநினைவின்றி இருக்கிறார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 27 முதல் 39 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் அனைவருக்கும் குற்றவியல், போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டத்தின் 326ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு சந்தேக நபர்களும் பேரா மாவட்ட காவல் தலைமையகம் அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset