நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா: விமரிசையாக நடைபெறுகிறது

மாரான்:

பகாங் மாநிலத்தில் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

நாட்டில் புகழ்பெற்ற ஆலயங்களில் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயமும் ஒன்றாகும்.

இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.

அவ்வகையில் 96ஆவது பங்குனி உத்திர விழா  ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திரம் என்பதால் பக்தர்கள் முன்கூட்டியே ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள்.

அவ்வகையில் பக்தர்கள் நேற்று முதல் காவடி, பால்குடம், தொட்டில் காவடி, கரும்பு காவடிகளை ஏந்தி தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.

குறிப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் பங்குனி உத்திர விழாவில் இரண்டாவது முறையாக கலந்து கொள்கிறேன்

இவ்விழாவை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த ஆலய நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துகள். 

மேலும் நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு ஆதரவளிப்பதிலும், சமூகத்திற்குள் மத, கலாச்சார மரபுகளை வலுப்படுத்துவதிலும் மஹிமாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தொடரும் என்று அதன் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset