நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மத்திய வங்கியின் 2025 நிதியறிக்கை: அரசாங்கத்திற்கு 500 கோடி ரிங்கிட் ஈவுத்தொகை

கோலாலம்பூர்:

மலேசியா மத்திய வங்கி (BNM) 2025-ல் அரசாங்கத்திற்கு RM5 பில்லியன் ஈவுத்தொகை செலுத்தியது, முந்தைய ஆண்டு இது RM5.25 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிங்கிட்டின் மதிப்பு வலுப்பெற்றதன் மத்தியில் ஏற்பட்ட நாணய மாற்று விளைவுகளை முக்கியமாகப் பிரதிபலிக்கும் வகையில், 2024-ல் RM621.54 பில்லியனாக இருந்த மத்திய வங்கியின் மொத்த சொத்துக்கள், 2025 டிசம்பர் 31 நிலவரப்படி RM602.22 பில்லியனாக இருந்தது.

சர்வதேச இருப்புக்கள் சொத்துக்களில் பெரும்பகுதியைத் தொடர்ந்து RM509.79 பில்லியனாக அமைந்தது (2024: RM520.13 பில்லியன் எட்டியது.

"எங்கள் பொறுப்புகளில் முதன்மையாக புழக்கத்தில் உள்ள நாணயம் (2025: RM177.75 பில்லியன்; 2024: RM170.72 பில்லியன்), நிதி நிறுவனங்களின் வைப்புத்தொகை (2025: RM118.06 பில்லியன்; 2024: RM131.92 பில்லியன்) ஆகியவை அடங்கும்" என்று மத்திய வங்கி இன்று இங்கு வெளியிட்ட தனது 2025 வருடாந்திர அறிக்கையில் தெரிவித்தது.

டிசம்பர் 31, 2025-ல் முடிந்த நிதியாண்டில் மத்திய வங்கி RM12.45 பில்லியன் நிகர லாபம் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டின் RM13.16 பில்லியனுடன் ஒப்பிடும்போது, இருப்பு நிரல் மேலாண்மை, நாணய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செலவுகளைக் கழித்த பிறகு மொத்த வருவாய் RM14.35 பில்லியனாக இருந்தது (2024: RM14.98 பில்லியன்).

2025-ல் மத்திய வங்கி தனது நிறுவன மேலாண்மைக்கு RM1.86 பில்லியன் செலவிட்டது.

RM12.45 பில்லியன் நிகர லாபத்தில், RM7.45 பில்லியன் (2024: RM7.91 பில்லியன்) அபாய இருப்பிற்கு மாற்றப்படும். 2025 இறுதியில் அபாய இருப்பு RM155.31 பில்லியனாக நிற்கிறது (2024: RM147.90 பில்லியன்).

"எங்கள் சொத்துக்களில் 85 சதவீதம் வெளிநாட்டு நாணயத்தில் மதிப்பிடப்பட்டிருப்பதால், போதுமான அபாய இருப்புகளைக் கட்டியெழுப்புவது எங்களுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

"இது நிதி சந்தை ஏற்றத்தாழ்வு, வெளிநாட்டு நாணய சொத்துக்களில் ஏற்பட்டு வரும் மாற்ற விகிதங்களைச் சமாளிக்க உதவுகிறது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset