செய்திகள் மலேசியா
கூலிமில் ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது: சார்லஸ்
கிள்ளான்:
கூலிமில் ஊடகவியலாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ இதனை கூறினார்.
கடந்த புதன்கிழமை கூலிம் ஹைடேக் பார்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலை கட்டுமான தளத்தில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் பத்திரிகையாளர் எஸ். காளிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது.
குறிப்பாக நலிவடைந்த சமூகங்கள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, பெரும்பாலும் வேண்டுமென்றே மறைக்கப்படும் உண்மைகளை ஆவணப்படுத்துவதில் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
ஒரு பத்திரிகையாளர் தனது கடமையைச் செய்யும்போது அவரைக் கைது செய்வது, ஊடகப் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், தகவல் பெறும் உரிமை இறுதியில் பறிக்கப்படும் பொதுமக்களுக்கும் ஓர் அச்சமூட்டும் செய்தியை அனுப்புகிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக தமிழ் செய்தி இணையதளத்தின் ஊடகவியலாளர் காளிதாஸ், ஆவணங்களற்ற குடியேறிகள் தொடர்பான ஒரு பிரச்சினையை செய்தி சேகரிக்கும்.போது அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கூலிம் காவல் நிலையத்தில் போலிசாரால் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 11:33 am
சாரா வழக்கு விசாரணை குழந்தை சாட்சியுடன் மீண்டும் தொடங்கியது
March 31, 2026, 11:03 am
'திறந்த மனதுடன் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்': துணைப் பிரதமர்
March 31, 2026, 10:17 am
சுங்கை பெசியில் பரபரப்பு: மாயமான மாற்றுத்திறனாளி இளைஞர் நலமுடன் மீட்பு
March 31, 2026, 10:14 am
மலேசிய வாகனங்களில் எரிபொருள் திருட்டா?: தாய்லாந்து சுற்றுலாத்துறை விளக்கம்
March 31, 2026, 9:53 am
31 குற்றப் பதிவுகளை கொண்ட ஆடவர் கேஎல்ஐஏவில் துரத்தி பிடிக்கப்பட்டார்: போலிஸ்
March 31, 2026, 9:36 am
2025ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்
March 31, 2026, 9:13 am
தம்பியைச் சுட்டு கொன்ற அண்ணன் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்
March 30, 2026, 11:45 pm
