நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செய்தி சேகரிப்பின் போது அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்ட ஊடகவியலாளர் கைது: தேசிய ஊடக மன்றம் வருத்தம்

கோலாலம்பூர்:

செய்தி சேகரிப்பின் போது அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு தேசிய ஊடக மன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

கூலிமில் உள்ள குலிம் ஹை-டேக் பார்க் தொழிற்சாலை கட்டுமான தளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் பத்திரிகையாளர் மீதான விசாரணை செயல்முறை, வெளிப்படையாகவும், தொழில்முறையாகவும் நடத்தப்பட வேண்டும்.

தேவையற்ற தலையீடு அல்லது அழுத்தம் இன்றி தங்கள் கடமைகளை ஆற்றுவதற்கான பத்திரிகையாளர்களின் உரிமையை மதிக்க வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும், அவசியம் மற்றும் விகிதாசாரக் கொள்கைகளின் அடிப்படையில் கடுமையாக மதிப்பிடப்பட வேண்டும்.

சட்டத்தின் உண்மையான மீறல்களுக்கும் சட்டபூர்வமான பத்திரிகைப் பணிக்கும் இடையே தெளிவாக வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியம்.

பல சூழ்நிலைகளில், சம்பவ இடத்தில் இருப்பது, உற்றுநோக்குதல், தகவல்களைப் பெறுதல் உள்ளிட்ட பத்திரிகைப் பணியானது, பொது நலன் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி செய்தி வெளியிடுவதில் ஊடகங்களின் சட்டபூர்வமான செயல்பாட்டின் ஒரு பகுதியாகும்.

எனவே, பத்திரிகையாளர்களின் பணியைக் குற்றமாக்காத வகையில், செய்தி சேகரிப்புப் பணியின் சூழலில் 'அத்துமீறல்' என்பதன் விளக்கம் கவனமாகத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

மேலும் இந்த வழக்கின் முன்னேற்றத்தை மன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset