செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
மும்பை:
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தது. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் ஐந்தாவது வாரமாக நீடிப்பதன் விளைவாக, உலக அளவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.
இதன் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 1,635 புள்ளிகள் (2.22%) சரிந்து 71,947.55-ல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 488 புள்ளிகள் (2.14%) வீழ்ச்சியடைந்து 22,331.40-ல் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.422 லட்சம் கோடியில் இருந்து ரூ.412.4 லட்சம் கோடியாகக் குறைந்தது. இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதனிடையே, அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 95-க்கும் அதிகமாக சரிந்தது.
ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பு 95.20-ஆக வீழ்ச்சியடைந்தது. வங்கிகளின் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலவரங்களை ரிசர்வ் வங்கி முறைப்படுத்திய போதிலும், ரூபாயின் சரிவைத் தடுக்க இயலவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 11:48 am
6 ஆண்டுகளுக்கு பிறகு பியோங்யாங்கிற்கு மீண்டும் பறக்கும் ஏர் சீனா
March 26, 2026, 3:55 pm
மத்திய கிழக்கு யுத்தத்தால் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் கட்டுமான துறை உதவி கோருகிறது
March 26, 2026, 12:59 pm
30 ரிங்கிட் முதலீட்டில் RM40 மில்லியன் சொத்து சேர்த்த முன்னாள் ஹாக்கி கேப்டன்
March 25, 2026, 10:11 am
ஒரே வாரத்தில் RM82 ரிங்கிட் குறைந்த தங்க விலை: நகைக் கடைகளில் திரளும் மக்கள்
March 24, 2026, 5:13 pm
தேனீ வளர்ப்புத் தொழில் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் ஈட்டும் கிராமத்துப் பெண்மணி
March 24, 2026, 3:44 pm
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
March 24, 2026, 11:34 am
