நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கம் ஒதுக்கிய 50 லட்சம் ரிங்கிட் நிதி வாயிலாக பேராவில் உள்ள ஏழு இந்திய கிராமங்கள் மேம்படுத்தப்படுகிறது: டத்தோ சிவநேசன்

பாகான் செராய்:

வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு ஒதுக்கிய 50 லட்சம் ரிங்கிட் நிதி வாயிலாக  பேராவில் உள்ள ஏழு இந்திய கிராமங்கள் மேம்படுத்தப்படுகிறது.

பேரா மாநில ஆட்சிக குழு உறுப்பினர் டத்தோ அ.  சிவநேசன் இதனை கூறினார்.

பேரா மாநிலத்தில் இந்தியர்கள் வாழக் கூடிய அந்த கிராமங்களுக்கு அதன் மேம்பாட்டிற்கு முன் வைத்த கோரிக்கை அந்த அமைச்சு நிதி  அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டில்
கம்போங் சூன் லீ இந்திய குடியிருப்புப் பகுதியின் சாலைகள்,கால்வாய்கள் சீரமைப்புப் பணிகளும் அடங்கும்.

7 இந்திய கிராமங்கள் நேரடியாக  வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் கீழ்  அவற்றுக்கான உதவிகள் வழங்கபட்டுள்ளது.

சாலைகள் பகுதி பகுதியாக சீ்ரமைக்கப படுவது சிமெண்ட் கால்வாய்கள் அமைக்கப்படுவது இதில் அடங்கும்.

இன்று பாரிட் புந்தார், பாகன் செராய்யில் இந்தியர்களின் நிலவரங்களை கேட்டறிந்தப் பின்னர் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக அவர் பாரிட் புந்தார் மருத்துவமனை நிலவரத்தையும் நீரில் கண்டதுடன் அந்த மருத்துவ மனையின் சீரமைக்கு 60 மில்லியன் ரிங்கிட் நிதி கோரிக்கை முன் வைத்துள்ளதாகவும் நிதி கிடைத்தால்  அந்த மருத்துவ மனையை நிபுணத்துவ மருத்துவ மனையாக உருமாற்றப்படலாம்.

மேலும் இந்தப் பகுதியில் ஆலயங்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset