நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணமோசடி வழக்கில் விக்டர் சின் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார்

கோலாலம்பூர்:

பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் தொழிலதிபர் விக்டர் சின் பூன் லூங் ஒன்பது பேருடன் கைது செய்யப்பட்டார்.

தேசிய போலிஸ்படையின் பணமோசடி தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் டத்தோ ஃபஸ்லிஷாம் அப்துல் மஜித் இதனை கூறினார்.

கடந்த 2025 அக்டோபர் 15 முதல் இந்த ஆண்டு ஜனவரி 13 வரை காவல்துறையால் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் வைக்கிங்' மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விக்டர் சின் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு பின்னர் போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், அந்தத் தொழிலதிபரை மீண்டும் அழைத்து அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை போலிஸ்  நிராகரிக்கவில்லை.

மேலும் தெளிவுபடுத்தல் தேவைப்படும் புதிய சான்றுகளைப் பொறுத்து இது அமையும்.

எந்தவொரு திரும்பப் பெறுதலும் நிலையான நடைமுறைகளின்படி செய்யப்படும், என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset