நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன்95 மானிய பெட்ரோல் முறைகேட்டைக் கட்டுப்படுத்த பெட்ரோல் நிலையங்களில் சி.சி.டி.வி நிறுவப்படுகிறது

புத்ராஜெயா: 

அதிக அபாயம் கொண்ட ரோன்95 மானிய பெட்ரோல் முறைகேடு நடைபெறும் பகுதிகளாக கண்டறியப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவும் என்று உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கை செலவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கை செலவு அமைச்சகத்தின் அமலாக்க பிரதான இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம், பதிவுகள் நேரடியாக அமைச்சின் அமலாக்க கட்டுப்பாட்டு மையம், மாநில அலுவலகங்களுக்கு அனுப்பப்படுவதால் இந்த முன்முயற்சி மிகவும் திறமையான கண்காணிப்பைச் செயல்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்கள் உட்பட 'ஹாட்ஸ்பாட்'களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் தொழில்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைத்து சி.சி.டி.வி நிறுவல் முன்னோட்ட கட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

"இன்ஷா அல்லா, இந்த ஆண்டு முறைகேடு பிரச்சினைகளைச் சமாளிக்க இந்த சி.சி.டி.வி தொழில்நுட்பத்தை மிகவும் தீவிரமாக பயன்படுத்தத் தொடங்குவோம்" என்று சமீபத்தில் பெர்னாமாவிடம் அவர் கூறினார்.

மானிய ரோன்95 பெட்ரோலைத் திருடுவதற்கு சிண்டிகேட்டுகள் பயன்படுத்தும் வழிமுறைகளில் பெட்ரோல் நிலையங்களில் கொள்முதல் செய்வதும், கூடுதல் தொட்டிகளுடன் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவதும் அடங்கும் என்று அஸ்மான் கூறினார்.

இதனால், அமைச்சு தற்போது 'பாய்ண்ட் அஃப் சேல்' தரவை நெருக்கமாக கண்காணித்து பெட்ரோல் நிலையங்களில் சில்லறை விற்பனை போக்குகளைப் பதிவு செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.

"தொலைதூர நிலையத்தில் ரோன்95 கொள்முதலில் திடீர் உயர்வு போன்று உள்ளூர் மக்கள்தொகையுடன் பொருந்தாத அசாதாரண கொள்முதல் வடிவங்கள் அல்லது முரண்பாடுகள் தென்பட்டால், அமைப்பு எச்சரிக்கை தெரிவிக்கும், சம்பந்தப்பட்ட குழுக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்படும்" என்று அவர் கூறினார்.

மானிய ரோன்95 பெட்ரோல் மலேசியர்களால் மட்டுமே அனுபவிக்கப்படுவதை உறுதிப்படுத்தி எந்தவொரு தரப்பினரும் முறைகேடு செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்த அமைச்சு அமலாக்கத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அஸ்மான் வலியுறுத்தினார்.

இதற்கு முன்பு, ரோன்95 முறைகேட்டின் எந்தவொரு வடிவத்தையும் கட்டுப்படுத்த அமலாக்கத்தில் மிகவும் உறுதியாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அனைத்து முகவர் அமைப்புகளையும் அரசாங்கத்தையும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியிருந்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset