நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வளைகுடா போர் எதிரொலி: விளக்குளை அணைக்கும்படி வங்காளதேச அரசாங்கம் உத்தரவு

டாக்கா:

 ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல் போரால் உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று பங்களாதேஷ். ஒரு காலத்தில் வங்காளதேசம் தெற்காசியாவின் இரண்டாவது ஆகப்பெரிய பொருளாதார மண்டலமாக இருந்தது. 

வங்காளதேச அரசாங்கம் எரிசக்தியை மிச்சப்படுத்த விளக்குகளை அடைக்கும்படியும் குளிர்சாதனத்தைக் குறைவாகப் பயன்படுத்தும்படியும் அரசு ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

தேவைப்படும்போது மட்டும்தான் மின் விளக்குகள், குளிர்சாதனம், மின்விசிறி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அதற்குத் தேவைப்படும் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றில் 95 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது. எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பங்களாதேஷ் சுமார் 2 பில்லியன் டாலர் கடனைப் பெற விரும்புகிறது. 

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவங்காளதேச அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகள எடுத்திருக்கிறது. பெட்ரோல், டீசலை வாங்க வரம்பு விதித்திருக்கிறது. உரம் தயாரிப்பதை நிறுத்தியிருக்கிறது. மேலும் பெட்ரோல் நிலையங்களைக் கண்காணிக்கக் காவல்துறை அதிகாரிகளை அனுப்பியிருக்கிறது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset