நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் போரில்  3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்: பென்டகன் அதிகாரி தகவல்

வாஷிங்டன்:

ஈரானின் ஏவு​கணை, டிரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​வின் 3 பில்லியன் டாலர்  மதிப்​பிலான ராணுவத் தளவாடங்​கள் சேதமடைந்​துள்​ள​தாகத் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

ஈரான் உடனான மோதல் தொடங்​கிய முதல் மூன்று வாரங்​களில் மட்​டும் அமெரிக்​கா​விற்கு சுமார் 1.4 பில்​லியன் டாலர் முதல் 2.9 பில்​லியன் டாலர் இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக் கணக்​கிடப்​பட்​டுள்​ளது.

இதனை பென்​டகன் முன்​னாள் பட்​ஜெட் அதி​காரி எலைன் மெக்​கஸ்​கர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். ஈரான் நடத்​திய தாக்​குதலில் அமெரிக்​கா​வின் அதிநவீன எஃப்​-35 ரக போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து அவசர​மாகத் தரையிறக்​கப்பட்​டது. மேலும், குவைத்தில் மூன்று எஃப்​-15இ ரக விமானங்​கள் சுடப்பட்டு விழுந்து நொறுங்​கின.

ஈராக் வான்​பரப்​பில் இரண்டு எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள் மோதிக்​கொண்​ட​தில் ஆறு வீரர்​கள் உயிரிழந்​தனர். சவுதி அரேபி​யா​வில் உள்ள இளவரசர் சுல்​தான் விமானப்​படை தளத்​தின் மீது ஈரான் நடத்​திய ஏவு​கணைத் தாக்​குதலில், ஐந்து கேசி-135 ரக விமானங்​கள் சேதமடைந்து தற்​போது பழுது​பார்க்​கப்​பட்டு வரு​கின்​றன.

இது தவிர, சுமார் 12-க்​கும் மேற்​பட்ட அதிநவீன ‘எம்​.கியூ-9 ரீப்​பர்' வகை ஆளில்லா உளவு விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டுள்​ளன. சவுதி அரேபி​யா, கத்​தார், ஜோர்​டான் ஆகிய நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்​களில் வைக்​கப்​பட்​டுள்ள ரேடார் அமைப்​பு​களும் ஈரானின் தாக்​குதலுக்கு உள்​ளாகி​யுள்​ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset