நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விமானக் கதவைத் திறக்க முயன்ற பயணி: துரிதமாகச் செயல்பட்டு விபத்தைத் தவிர்த்த ஊழியர்கள்

வாரணாசி:

வானில் பறந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் அவசரகாலக் கதவை, பயணி ஒருவர் திடீரெனத் திறக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே பயணித்த இந்த விமானத்தில், சுமார் 180 பயணிகள் இருந்த நிலையில், விமானப் பணியாளர்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானம் நடுவானில் இருந்தபோது, ஒரு பயணி திடீரெனத் தனது இருக்கையை விட்டு எழுந்து சென்று அவசரகாலக் கதவைத் திறக்க முற்பட்டார். அவர் ஏதோ ஒரு சக்தியால் ஆட்கொள்ளப்பட்டது போலவும், தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார். 

இதனால் விமானத்திற்குள் இருந்த மற்ற பயணிகள் கடும் அச்சமடைந்தனர். உடனடியாகச் செயல்பட்ட விமானப் பணிப்பெண்கள், சக பயணிகள், அந்த நபரைத் தடுத்து நிறுத்தித் தனது இருக்கையில் கட்டிப்போட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வாரணாசி விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், காத்திருந்த பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் அந்தப் பயணியைக் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது போதையில் இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

விமானப் பணியாளர்களின் ஒன்றிணைந்த சிந்தனையால், 180 உயிர்கள் காப்பாற்றப்பட்டதை விமான நிறுவனம் பாராட்டியுள்ளது.

வான்வழிப் பயணப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் வாரணாசி விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset