செய்திகள் வணிகம்
6 ஆண்டுகளுக்கு பிறகு பியோங்யாங்கிற்கு மீண்டும் பறக்கும் ஏர் சீனா
பெய்ஜிங்:
ஆறு ஆண்டுகள் 'இடைவெளிக்கு' பிறகு ஏர் சீனா பெய்ஜிங், வட கொரியாவின் பியோங்யாங்கிற்கு இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியது.
தலைநகரங்களுக்கிடையே ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு, வட கொரியா படிப்படியாக மேலும் திறந்த நிலையைக் கொண்டுவருவதாக இந்த நடவடிக்கை காட்டுகிறது.
சீனா வட கொரியாவின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான வர்த்தக பங்காளியாகவும் அரசியலில் முக்கிய ஆதாரமாகவும் இருப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
எனினும், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் 2020-ல் கடுமையான எல்லை மூடல் செயல்படுத்தப்பட்டதால் இந்தக் கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கிடையே போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.
ஏர் சீனா இணையதளத்தின்படி, CA121 விமானம் இன்று காலை 8.05 மணிக்கு பெய்ஜிங் தலைநகரின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு பியோங்யாங்கின் சுனான் சர்வதேச விமான நிலையத்தை அடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
பியோங்யாங் சுற்றுலா விசா வழங்க மறுப்பதால், உத்தியோகப்பூர்வ அல்லது சிறப்பு நோக்கமுள்ள பயணிகளுக்கு மட்டுமே எல்லை கடந்த பயணம் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான தினசரி பயணிகள் ரயில் சேவையும் மார்ச் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
கர்சர் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதால் கோடீஸ்வரராகும் இந்தியர், பாகிஸ்தான் இளைஞர்
June 15, 2026, 2:22 pm
போர் நிறுத்தம் எதிரொலி: சரிந்தது எண்ணெய் விலை
June 15, 2026, 12:24 pm
டுரியானின் அறுவடைக்காலம் தொடங்குகிறது: விலை ஏறலாம் என விற்பனையாளர்கள் கவலை
June 11, 2026, 6:06 pm
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்: பணவீக்க அதிர்ச்சியால் தள்ளாடும் டாலர்
June 11, 2026, 6:01 pm
லக்சாவிலிருந்து கலை உலகம் வரை: மூன்று தலைமுறைப் பெண்களின் வெற்றிப் பயணம்
June 10, 2026, 10:39 am
வாடிக்கையாளர்களைக் கவர உணவகங்களை அதன் செயலியில் விளம்பரப்படுத்த கிராப் நிறுவனம் புதிய திட்டம்
June 8, 2026, 11:15 am
