நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ராவணா கிண்ண கபடி போட்டியில் பிளேக் பெந்தர்ஸ் அணியினர் வாகை சூடினர்

கெப்போங்:

ராவணா கிண்ண கபடி போட்டியில் பிளேக் பெந்தர்ஸ் அணியினர் முதல் நிலையில் வாகை சூடினர்.

பிளேக் பெந்தர்ஸ் கபடி கிளப்  தலைவர் ஈஸ்வரன் சுப்பிரமணியம் இதனை கூறினார்.

கோல்டன் கிங்டம் நிறுவனம் சிலாங்கூர் மாநில நலவாழ்வு, பொழுதுபோக்கு விளையாட்டு மன்றம், பிளேக் பெந்தர்ஸ் கபடி கிளப் ஏற்பாட்டில் இப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய பிளேக் பெந்தர்ஸ் அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற இவ்வணிக்கு 3,000 ரிங்கிட்டும் வெற்றி கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது.

ரெட் ஜெயிண்ட் ஏ அணியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.

கிள்ளான் ஸ்டார்ஸ் அணியினர் மூன்றாவது இடத்தையும் சொல்டாடு அணியினர் நான்காவது இடத்தை பிடித்தனர்.

வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இக்கபடி போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆதரவாக அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றி என்று ஈஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset