நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசானின் திறந்த இல்ல உபசரிப்பு; மலேசியர்களின் பல்லின கலாச்சாரத்தை பிரதிபலித்தது: டத்தோஸ்ரீ தனேந்திரன்

ரந்தாவ்:

டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசானின் திறந்த இல்ல உபசரிப்பு மலேசியர்களின் பல்லின கலாச்சாரத்தை பிரதிபலித்தது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.

வெளியுறவு அமைச்சரும், தேசிய முன்னணி துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ உத்தாமா ஹாஜி முஹம்மது ஹசானின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டேன்.

பல்லின சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஆயிரக்கணக்கானோர்  கலந்து கொண்டதால் இந்த விழா மிகவும் களைகட்டியது.

அங்கு நிலவிய நட்பான சூழல், பல்லின மலேசிய, பழக்கவழக்கங்கள், கலாச்சாரத்தின் அழகைத் தெளிவாகப் பிரதிபலித்தது.

பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு பரிமாறப்பட்டது.

மேலும் உள்ளூர் சமூகத்தை நல்லிணக்கம் நிறைந்த சூழலில் வெற்றிகரமாக ஒன்றிணைத்த இந்தத் திறந்த இல்ல உச்சரிப்பு பாராட்டுக்கிறது.

நெகிரி செம்பிலான் தலைவர் எஸ். கணவதி, துணைத் தலைவர்  கௌதமன், பொருளாளர்  ராம்லால், செயலாளர்  சரவணன் நாயுடு உட்பட பலர் என்னுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தேசத்தின் நலனுக்காக இந்த ஒற்றுமை, நல்லிணக்க உணர்வு தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset