நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியா, ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு பாதிப்பில்லை: மெட் மலேசியா

கோலாலம்பூர்: 

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவாவில் 5.8 மாக்னிட்யூட் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலேசியா கடல் பரப்பில் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மலேசியா வானிலை மையம் (மெட் மலேசியா) உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று காலையில் மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், இந்த நடுத்தர அளவிலான நிலநடுக்கம் இன்று காலை 6.51 மணிக்கு நடந்தது என்றும் இதனால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கம் 3.4 டிகிரி தெற்கு, 139.4 டிகிரி கிழக்கு ஆயத்தொலைவில் 56 கிலோமீட்டர் (கி.மீ.) ஆழத்தில் மையப்பட்டதாக மெட் மலேசியா தெரிவித்தது.

இதற்கு முன்னதாக, நேற்று இரவு ஜப்பானின் ஹான்ஷுவின் கிழக்கு கடலோரத்திற்கு வெளியே 6.4 மாக்னிட்யூட் கொண்ட வலுவான நிலநடுக்கமும் நடந்ததாக மெட் மலேசியா அறிவித்தது.

இரவு 10.18 மணிக்கு நடந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. அது 3.95 டிகிரி வடக்கு, 143.5 டிகிரி கிழக்கு ஆயத்தொலைவில் 63 கிலோமீட்டர் (கி.மீ.) ஆழத்தில் மையப்பட்டது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset