நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டினால் பள்ளிகள் மூடப்படலாம்: கல்வி துணையமைச்சர்

கோப்பெங்:

நாட்டில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டினால் பள்ளிகள் மூடப்படலாம்.

கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இதனை கூறினார்.

நாட்டில் வெப்ப நிலை மிகவும் மோசமான நிலை அடைந்து வருகிறது.

இதன் அடிப்படையில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டும் நிலை, பள்ளிகளை தற்காலிகமாக மூடுவதற்கு பள்ளி நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளது.

கல்வி அமைச்சு முன்னர் வெளியிட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இந்த நிலைமை அமைந்துள்ளது.

2023 முதல் நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளபடியே, நாம் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு மாநிலக் கல்வித் துறை, மாவட்டக் கல்வி அலுவலகம், பள்ளிக்கு போதுமான அனுபவம் உள்ளது.

இங்குள்ள கோப்பெங் தமிழ்ப்பள்ளியில் கட்டிட மேம்பாட்டுத் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அங்கு பணி நிமித்தமாக வருகை தந்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset