செய்திகள் மலேசியா
“உறுதியான உத்தரவாதமின்றி தற்காலிக அமைதி பயனற்றது”: பிரதமர் அன்வார் வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
எந்தவொரு தற்காலிக போர்நிறுத்தமும் உறுதியான உத்தரவாதங்களின்றி அமல்படுத்தப்பட்டால், அது மீண்டும் வன்முறைக்கான சுழற்சியையே உருவாக்கும் என மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
காசா, லெபனான் பகுதிகளில் கடந்த கால அனுபவங்கள் இதை தெளிவாக காட்டியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைதி முயற்சிகள், நீதியும், பொறுப்புணர்வும், நீடித்த உறுதிப்பாட்டும் ஆகிய அடிப்படைகளில் அமைய வேண்டியது அவசியம் என்றும், மேற்காசியாவில் நிலையான அமைதி உருவாக முழுமையான தீர்வு தேவைப்படுகின்றது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இது அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் மனித மரியாதையையும் மீட்டெடுக்க உதவும் என்றார்.
இந்நிலையிலேயே, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். போரின் முழுமையான முடிவை நிபந்தனையாகக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருப்பதையும் அவர் வரவேற்றார்.
மேலும், ஈரானில் உயிரிழந்த இராணுவர்கள், பொதுமக்களுக்கு அன்வார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை அமெரிக்கா ஆதரிப்பதையும் மலேசியா கடுமையாக கண்டிப்பதாகவும், பொதுமக்களை குறிவைக்கும் எந்த நடவடிக்கையும் சர்வதேச சட்டத்தையும் மனிதநேயக் கொள்கைகளையும் மீறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 11:07 am
மிஸ்டர் ஆர் என்பவர் ரூபன் என்ற வழக்கறிஞர்: ரபிசி அம்பலப்படுத்தினார்
March 27, 2026, 10:47 am
தாய்லாந்துக்கு பெட்ரோல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: மூவர் கைது
March 26, 2026, 10:11 pm
பூடி 95 திட்டத்தில் மாற்றம் தற்காலிகமானது; மக்கள் புரிந்துகொள்வார்கள்: பிரதமர் நம்பிக்கை
March 26, 2026, 10:08 pm
பத்துமலையில் தேசிய ஆலய கருத்தரங்கு; டான்ஸ்ரீ நடராஜா தொடக்கி வைப்பார்: டத்தோ சிவக்குமார்
March 26, 2026, 10:04 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு தனியார் துறை முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர் அன்வார்
March 26, 2026, 6:56 pm
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்
March 26, 2026, 5:52 pm
டீசல் விலை உயர்வு: 5,000 பேருந்து தொழிலதிபர்கள் பாதிப்பு
March 26, 2026, 5:35 pm
