செய்திகள் வணிகம்
மத்திய கிழக்கு யுத்தத்தால் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் கட்டுமான துறை உதவி கோருகிறது
பெட்டாலிங் ஜெயா:
மத்திய கிழக்கு யுத்தத்தால் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், கட்டுமான துறைக்கு உடனடி நிதி நிவாரணம் வழங்குமாறு மாஸ்டர் பில்டர்ஸ் அசோசியேஷன் மலேசியா (MBAM) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் புவிசார் அரசியல் பதற்றங்களால் பொருட்கள், எரிசக்தி விலைகள் உயர்ந்ததால் கட்டுமான துறை அதிகரித்துவரும் அழுத்தத்தை சந்தித்துக்கொண்டிருப்பதாக மாஸ்டர் பில்டர்ஸ் அசோசியேஷனின் தலைவர் ஒலிவர் வீ அறிக்கையில் கூறினார்.
பிராந்திய மோதல் உள்ளீட்டு செலவுகளை உயர்த்தி, விநியோகக் காலக்கெடுக்களை நிச்சயமற்றதாக மாற்றி, துறை முழுவதும் பணப்புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மென் கடன்கள், நிதி உத்தரவாத திட்டங்கள், கட்டுமான சேவைகளுக்கான வரிகளை குறைத்தல் அல்லது ஒத்திவைத்தல், டீசல் மானியங்களை பராமரித்தல், தளவாடச் செலவுகளுக்கான ஆதரவு ஆகியவற்றை வீ கோரினார்.
இரும்பு, சிமெண்ட், எரிபொருள் போன்ற முக்கிய பொருட்களுக்கான கட்டாய விலை மாற்ற வழிமுறைகளை அறிமுகப்படுத்துவது உட்பட நியாயமான, சமநிலையான ஒப்பந்த கட்டமைப்பையும் அவர் கேட்டுள்ளார்.
தற்போதுள்ள ஒப்பந்தங்களில் புதிய நிதிக் கொள்கைகள் அல்லது வரிகள் விதிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழி அளிக்கப்பட வேண்டும் என்றும், சரியான நேரத்தில் சான்றிதழ், பணம் வழங்குதலை உறுதிப்படுத்த வலுவான பணம் வழங்கும் வழிமுறைகள் வேண்டும் என்றும் அவர் கோரினார்.
தளர்த்தப்பட்ட இறக்குமதி தேவைகள், விரைவான அனுமதிகள் மூலம் மாற்று மூலங்களை எளிதாக்குவது உட்பட விநியோக சங்கிலி நிலைப்படுத்தல் நடவடிக்கைகளும் தேவை என்று வீ கூறினார்.
"முக்கியமான கட்டுமான பொருட்களுக்கான மூலோபாய இருப்புகளை நிறுவ அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
விநியோகச் சங்கிலி இடையூறுகளால் எழும் கால நீட்டிப்பு உரிமைகளை அங்கீகரிப்பது உட்பட திட்ட தொடர்ச்சி நடவடிக்கைகளையும் வீ கோரினார்.
"பாதிக்கப்பட்ட திட்டங்களுக்கு உறுதிபடுத்தப்பட்ட இழப்பீடுகளைத் தற்காலிகமாக நிவாரணம் செய்தல் அல்லது மிதமாக்குதல், மேலும் தேவைப்படும் இடங்களில் நடந்துகொண்டிருக்கும் அரசாங்க ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து சரிசெய்தல் வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
நியாயமான அபாய பகிர்வு நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள, வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை மேம்படுத்தவும் சரியான நேரத்தில் பணம் வழங்குவதை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தி, தனியார் துறையில் அதிக ஒத்துழைப்பையும் வீ வலியுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 12:59 pm
30 ரிங்கிட் முதலீட்டில் RM40 மில்லியன் சொத்து சேர்த்த முன்னாள் ஹாக்கி கேப்டன்
March 25, 2026, 10:11 am
ஒரே வாரத்தில் RM82 ரிங்கிட் குறைந்த தங்க விலை: நகைக் கடைகளில் திரளும் மக்கள்
March 24, 2026, 5:13 pm
தேனீ வளர்ப்புத் தொழில் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் ஈட்டும் கிராமத்துப் பெண்மணி
March 24, 2026, 3:44 pm
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
March 24, 2026, 11:34 am
ஓய்வூதியச் சேமிப்பை இரட்டிப்பாக்க வழிமுறைகள்: நிபுணர்களின் ஆலோசனை
March 22, 2026, 5:35 pm
40 டிகிரி செல்சியஸ் வெப்பம்: கெடா மாநிலத்தில் இளநீர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது
March 22, 2026, 11:25 am
வீட்டிலிருந்தே ஐந்து இலக்க வருமானம் ஈட்டும் இல்லத்தரசியின் சாதனை
March 22, 2026, 11:00 am
