செய்திகள் வணிகம்
ஓய்வூதியச் சேமிப்பை இரட்டிப்பாக்க வழிமுறைகள்: நிபுணர்களின் ஆலோசனை
கோலாலம்பூர்:
ஊழியர் சேமநிதி வாரியத்தின் (KWSP) உறுப்பினர்கள், தங்களின் ஓய்வூதியக் காலச் சேமிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், 'உறுப்பினர் முதலீட்டுத் திட்டத்தின்' கீழ் அங்கீகரிக்கப்பட்ட யூனிட் டிரஸ்ட் (Unit Trust) எனப்படும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன்படி, உறுப்பினர்கள் தங்களின் கணக்கு 1-இல் உள்ள அடிப்படைச் சேமிப்பிற்கு மேலதிகமாக உள்ள தொகையில் 30 விழுக்காடு வரை மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
ஓய்வூதியச் சேமிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முதலீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதித்துறை நிபுணர் டாக்டர் அஹ்மத் டானியல் ஜைனுதீன், இத்திட்டம் சேமநிதி வாரியத்தின் பங்களிப்பை மாற்றுவதற்கு அல்ல என்றும், மாறாக உறுப்பினர்கள் தங்களின் முதலீடுகளைப் பன்முகப்படுத்தி கூடுதல் லாபத்தைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2025-ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம், வழக்கமான, சிரியா சேமிப்புகளுக்கு 6.15 விழுக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 6.30 விழுக்காட்டை விட சற்றே குறைவு என்றாலும், இத்தகைய சிறிய மாற்றங்கள் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை வேறு முதலீடுகளுக்கு மாற்றத் தூண்டும் முக்கிய காரணியாக இருக்காது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
உறுப்பினர்களின் அடிப்படைச் சேமிப்பு சேமநிதி வாரியத்திலேயே இருப்பதை உறுதி செய்யும் வகையில் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
