நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஓய்வூதியச் சேமிப்பை இரட்டிப்பாக்க வழிமுறைகள்: நிபுணர்களின் ஆலோசனை

கோலாலம்பூர்: 

ஊழியர் சேமநிதி வாரியத்தின் (KWSP) உறுப்பினர்கள், தங்களின் ஓய்வூதியக் காலச் சேமிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், 'உறுப்பினர் முதலீட்டுத் திட்டத்தின்' கீழ் அங்கீகரிக்கப்பட்ட யூனிட் டிரஸ்ட் (Unit Trust) எனப்படும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதன்படி, உறுப்பினர்கள் தங்களின் கணக்கு 1-இல் உள்ள அடிப்படைச் சேமிப்பிற்கு மேலதிகமாக உள்ள தொகையில் 30 விழுக்காடு வரை மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

ஓய்வூதியச் சேமிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முதலீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதித்துறை நிபுணர் டாக்டர் அஹ்மத் டானியல் ஜைனுதீன், இத்திட்டம் சேமநிதி வாரியத்தின் பங்களிப்பை மாற்றுவதற்கு அல்ல என்றும், மாறாக உறுப்பினர்கள் தங்களின் முதலீடுகளைப் பன்முகப்படுத்தி கூடுதல் லாபத்தைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2025-ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம், வழக்கமான, சிரியா சேமிப்புகளுக்கு 6.15 விழுக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 6.30 விழுக்காட்டை விட சற்றே குறைவு என்றாலும், இத்தகைய சிறிய மாற்றங்கள் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை வேறு முதலீடுகளுக்கு மாற்றத் தூண்டும் முக்கிய காரணியாக இருக்காது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

உறுப்பினர்களின் அடிப்படைச் சேமிப்பு சேமநிதி வாரியத்திலேயே இருப்பதை உறுதி செய்யும் வகையில் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset