நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் கொண்டாட்டங்களின் போது அந்நிய நாட்டினர் மீது ஏன் சோதனை நடத்தப்படுகிறது?: ஜைட் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

பெருநாள் கொண்டாட்டங்களின் போது அந்நிய நாட்டினர் மீது ஏன் சோதனை நடத்தப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜைட் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.

பெருநாள் கொண்டாட்டக் காலத்தில் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட சிலாங்கூர் குடிநுழைவுத் துறையை அவர் விமர்சித்தார்.

மேலும், அதனைச் செயல்படுத்திய நேர காலத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்கினார்.

பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட நெரிசலான இடங்களில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரின் வசிப்பிட நிலை, பயண ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த விமர்சனம் எழுந்தது.

நண்பர்களுடன் பண்டிகையைக் கொண்டாட மட்டுமே விரும்பிய வெளிநாட்டினரை, பெருநாளுக்கு முன்னதாகப் போக்குவரத்து மையங்களிலும் சந்தைகளிலும் தடுத்து வைத்த அதிகாரிகளின் நடவடிக்கைகள் கேள்விக்குறியானது.

நாட்டில் ஆயிரக்கணக்கான ஆவணமற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பது ஒரு 'ஊழல் நிறைந்த அமைப்பிற்கு' சான்றாகும்.

அவர்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களை அனுபவிக்க நேரம் கொடுப்பதற்காகச் சில நாட்களுக்குச் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது உட்பட, மேலும் மனிதாபிமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset