நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்கு ஆசிய மோதல்களைத் தொடர்ந்து மருந்து விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது: சுகாதார அமைச்சு

புத்ராஜெயா:

மேற்கு ஆசிய மோதல்களைத் தொடர்ந்து மருந்து விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது.

சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில் இதனை கூறியது.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழ்நிலை இருந்தபோதிலும், நாட்டில் மருந்து விநியோகம் நிலையாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

குறுகிய காலத்தில் விநியோகச் சங்கிலியில் மோதலின் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்.

தற்போதைய பயனீட்டாளர்களின் தேவைகளைப் பொறுத்து, அரசு சுகாதார நிலையங்களில் ஒன்று முதல் மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

சுகாதார அமைச்சின் வசதிகளில் உள்ள மருந்துகளின் கையிருப்பு, பயன்பாட்டுத் தேவைகளின் அடிப்படையில் 1 முதல் 3 மாதங்களுக்குப் பராமரிக்கப்படுகிறது.

மேலும், தளவாடச் சலுகைகள் மூலம் வழங்கப்படும் மருந்துகளுக்காக, சலுகையாளர் மட்டத்தில் 2 மாதங்கள் வரையிலான கூடுதல் இடையிருப்பு கையிருப்புகளும் உள்ளன என்று அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset