நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புனித மக்கா ரமலான் சிறப்பு: 33.8 மில்லியன் மக்களுக்கு இப்தார் விருந்து

ரியாத்: 

ரமலான் மாதத்தில், புனித மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவி ஆகிய இரு புனிதப் பள்ளிகளிலும் சுமார் 33.8 மில்லியன் (3.38 கோடி) இப்தார் உணவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

யாத்ரீகர்களின் நலன் கருதி சவுதி அரேபிய அரசு மேற்கொண்டுள்ள இந்த விரிவான ஏற்பாடுகள், அந்நாட்டின் ஆன்மீகப் அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகின்றன.

இரு புனிதப் பள்ளிகளின் விவகாரங்களுக்கான பொது ஆணையத்தின் நேரடிக் கண்காணிப்பில், ஒருங்கிணைந்த சேவை அமைப்பின் கீழ் இந்த உணவு விநியோகம் நடைபெறுகிறது. 

குறிப்பாக, மகரிப் தொழுகைக்கு முன்னதான நெருக்கடியான நேரங்களில், கூட்ட நெரிசலைச் சீரமைத்து, சுகாதாரமான முறையில் உணவுகளை வழங்கத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவின் '2030 தொலைநோக்குத் திட்டத்திற்கு' (Vision 2030) ஏற்ப, இச்சேவைகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தனிநபர்கள், அறக்கட்டளைகள் இந்தத் தானத்தில் பங்கெடுக்க வசதியாக, ரமலான் தொடங்குவதற்கு முன்பே இணையவழி விண்ணப்ப முறையையும் அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இத்திட்டமானது யாத்ரீகர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் மனநிறைவான சூழலை உறுதி செய்கிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset