நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது நிதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல், கையாடல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக மூன்று புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும்: எம்ஏசிசி

புத்ராஜெயா:

அரசு சாரா இயக்கங்கள் நிதி திரட்டுதல் உள்ளிட்ட பொது நிதி விவகாரங்களில் உள்ள குறைபாடுகள், நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் பெரிய அளவிலான ஊழலுக்கு இனி வழிவகுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, குறைந்தபட்சம் மூன்று புதிய சட்டங்களை இயற்ற வேண்டும்.

எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதனை பரிந்துரைத்துள்ளது.

நிதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும், அதிகப்படியான பணத்தை உள்ளடக்கிய ஊழல் நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் குறைபாடுகளைச் சரிசெய்யும் முயற்சியில், இந்த நோக்கத்திற்காக குறிப்பிட்ட சட்டங்கள் தேவைப்படுகின்றன.

முன்மொழியப்பட்ட முதல் சட்டம், அரசு ஊழியர்களிடையே கடுமையான குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் எந்தவொரு முறையற்ற நடத்தையையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட, அரசுப் பதவிகளில் நிகழும் முறைகேடு தொடர்பான ஒரு சட்டமாகும்.


இந்த முன்மொழிவை முன்வைத்த  எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி, இரண்டாவது சட்ட மசோதா ஒரு நல்வாழ்வுச் சட்டம் என்று கூறினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, வசதியற்றவர்களுக்கு விநியோகிப்பதாகக் கூறிப் பணம் வசூலிப்பவர்களால், பொது நன்கொடை நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சியாக இந்தச் சட்டம் முன்மொழியப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset