செய்திகள் மலேசியா
மஇகாவின் சதுரங்கப் போட்டியில் 548 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பு; நாட்டிலேயே பெரிய போட்டியாக விளங்குகிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
மஇகா ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கான சதுரங்கப் போட்டியில் 548 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இது நாட்டிலேயே மிகப் பெரிய சதுரங்கப் போட்டியாக விளங்குகிறது என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சதுரங்க விளையாட்டின் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில மஇகாவின் ஏற்பாட்டில் இந்த போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த விளையாட்டு போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து கிட்டத்தட்ட 540 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் நாட்டில் மிகப் பெரிய சதுரங்கப் போட்டியாக திகழ்கிறது.
மேலும் சதுரங்கப் போட்டி கட்டொழுங்குடன் மாணவர்களிடையே சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கிறது.
அதன் அடிப்படையில் இதுபோன்ற போட்டிகளை மஇகா தொடர்ச்சியாக நடத்தும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகாவின் கீழ் செயல்படும் எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை நாங்கள் சொந்தமாக செலவு செய்ய முடியாது.
இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள முடியும். இவ்விவகாரத்தில் நாங்கள் சுயநலத்துடன் செயல்பட முடியாது.
இந்திய சமுதாயமும் மாணவர்களும் பயன் பெற வேண்டும். இது தான் எங்களின் இலக்கு என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
