நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டமைப்பு, இலக்கவியல் தணிக்கை நடத்துமாறு அம்பாங் மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சு உத்தரவு: டாக்டர் சுல்கிப்லி

அம்பாங்:

கட்டமைப்பு, இலக்கவியல் தணிக்கை நடத்துமாறு அம்பாங் மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ  டாக்டர் சுல்கிப்லி அஹ்மத் இதனை கூறினார்.

அம்பாங் மருத்துவமனையின் பழுதடைந்த உள்கட்டமைப்பினால் எழும் அடிப்படைப் பிரச்சினைகள் முறையாக கையாளப்பட வேண்டும்

தள அடிப்படையில் அம் மருத்துவமனையில் ஒரு விரிவான கட்டமைப்பு, இலக்கவியல் தணிக்கையை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

தனது சமூக ஊடகப் பதிவில், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்புவதையும், நோயாளிகளின் பாதுகாப்பு சமரசமற்ற முன்னுரிமையாகத் தொடர்வதையும் உறுதிசெய்ய சுகாதார அமைச்சு அவசரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மருத்துவமனை தகவல் அமைப்பில் ஏற்பட்ட இடையூறு குறித்து, கணினி தொகுதியைப் பாதித்த ஒரு தொழில்நுட்பப் பராமரிப்புப் தவறே இதற்குக் காரணம்.

தொழில்நுட்பக் குழு, கணினித்  தரவு ஒருமைப்பாட்டுச் சரிபார்ப்பை மேற்கொண்டு வருகிறது. 

மருத்துவப் பராமரிப்பு எந்தவித இடையூறும் இன்றி கைமுறையாகத் தொடர்வதை உறுதி செய்வதற்காக, வணிகத் தொடர்ச்சித் திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய இலக்கவியல் அமைப்பு, உள்கட்டமைப்புச் சவால்கள் தொடர்பான மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட மருத்துவமனைக்குச் சென்ற பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset