நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாலை விபத்து: ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் காரிலிருந்த பெண் மீட்பு

பாலிங்: 

கெடா மாநிலம் பாலிங் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் கார் ஒன்றில் சிக்கியிருந்த 56 வயது பெண்ணை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

இன்று அதிகாலை 1.26 மணியளவில் கம்போங் பாடாங் செடோல் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. பெண் ஓட்டிச் சென்ற புரோட்டான் X50 கார், 57 வயது ஆண் ஓட்டிய ஃபோர்டு ரேஞ்சர் நான்கு சக்கர வாகனம் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பெண்ணின் கால்பகுதி கார் உள்ளே சிக்கி காயமடைந்தார். அவசர அழைப்பைப் பெற்றதும், பாலிங் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு விரைந்தது. 

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் கடுமையான காயம் ஏற்படாமல் இருக்க சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி கவனமாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காயமடைந்த பெண் கூலிம் நோக்கி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், ஆண் ஓட்டுநர் சுங்கை பெட்டாணி நோக்கி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீட்பு நடவடிக்கை அதிகாலை 4.33 மணிக்கு நிறைவடைந்தது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset