நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எரிவாயு தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை; அரசு அலுவலகங்கள் அனைத்தும் வாரத்தில் 4 நாட்கள் மட்டும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உத்தரவிட்டார் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 

இஸ்லாமாபாத்:

இஸ்ரேல் - ஈரான் போரால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொலைக்காட்சி மூலம் அறிவித்து உள்ளார். அப்போது எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் வங்கியைத் தவிர அரசு அலுவலகங்கள் அனைத்தும் வாரத்தில் 4 நாட்கள் மட்டும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset