நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாள்; பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி கூடுதல் விடுமுறை: கல்வியமைச்சு

புத்ராஜெயா -

நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி  கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

கல்வியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.

இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 18 ஆம் தேதி கூடுதல் விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பெருநாளை மகிழ்ச்சியான சூழ்நிலையில் கொண்டாடுவதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கு இடமளிக்கும் வகையில் கூடுதல் விடுமுறை அளிக்கப்படுகிறது.

கல்வி சமூகத்தின் நல்வாழ்வுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கல்வியமைச்சின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியின் அடிப்படையில், கெடா, கிளந்தான், திரெங்கானுவை உள்ளடக்கிய குழு ஏ இல் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 19 அன்று கூடுதலாக ஒரு நாள் விடுமுறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மலாக்கா, ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவா, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா உள்ளடக்கிய குழு பி இல் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி  கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset