நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் பெட்ரோல் விலை உயர்வு: ஓட்டுநர்களுக்காகச் சுமையை ஏற்கும் டாக்சி நிறுவனங்கள்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் எரிபொருள் விலை உயர்வின் ஒரு பகுதியைத் தாங்களே ஏற்றுக்கொள்வதாகச் சில டாக்சி நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.

ஈரான் போரால் உலக எண்ணெய் விலைகள் அதிகரித்திருப்பதால் எரிபொருள் விலைகள் உயர்ந்திருக்கின்றன.

ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் தேசிய டாக்சி சங்கத்துடன் இணைந்து எரிபொருள் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்ததாக ComfortDelGro கூறியிருக்கிறது.

மத்திய கிழக்கு நிலவரத்தைக் கண்காணிப்பதாகச் சொன்ன Trans-Cab நிறுவனமும் விலை உயர்வை ஏற்றுக்கொள்கிறது.

Grab, Ryde ஆகிய தனியார் வாடகைக் கார் நிறுவனங்கள் ஓட்டுநர்களுக்கு உதவ வேறு திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறுகின்றன.

ஓட்டுநர்களிடமிருந்து சிறப்புக் கட்டணம் வசூலிக்காதது, எரிபொருள் வாங்கச் சலுகைகள் அளிப்பது ஆகியவை திட்டங்களில் அடங்கும்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset