நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

5 முதியவர்களைக் கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்: போலிஸ் விசாரணை தீவிரம் 

ரோம்: 

ஐந்து முதியோர்களை கொலை செய்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 27 வயது சந்தேக நபர் ஓட்டிச் சென்ற ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டபோது இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து, ஃபோர்லியில் உள்ள விசாரணையாளர்கள் இத்தாலிய சிவப்பு குறி சங்கத்தின் கீழ் பணிபுரியும் அந்த ஆண் தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், குற்றவாளி மருத்துவமனையிலிருந்து எமிலியா-ரோமானியா பிரதேசத்தில் உள்ள பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்ட நோயாளர்களுக்குத் தீங்கு விளையும் பொருட்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

“அதிகாரிகள் மற்ற சம்பவங்களையும் பரிசோதித்து வருகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்,” என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset