நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுவர் ஆபாசப் புகைப்படங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் நீதிமனறத்தில் ஆஜர்

கோலாலம்பூர்: 

மலேசியா, சோபைதுல் அமீன் என்ற 28 வயது வங்களாதேச நபரை, சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்களில் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் அமெரிக்காவின் ‘FBI’க்கு ஒப்படைத்துள்ளது. 

‘FBI’ இயக்குநர் காஷ் படேல் X தளத்தில் தெரிவித்ததாவது, அமீன் மலேசியாவில் இருந்து ‘FBI’ ஆங்கரேஜ் மூலம் அலாஸ்காவுக்கு மாற்றப்பட்டு, அங்கு இன்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கப்படுவார்.

அமீன் 2022 முதல் பல சிறுவர்களின் ஆபாசப் புகைப்படத்தின் குற்றச்சாட்டுகளால் தேடப்பட்டவர் எனவும், அந்த குற்றச்சாட்டுகள் ‘SnapChat’ வழியாக புகைப்படங்களாலும், காணொலியாகவும் கையாளப்படுகிறது என அவர் கூறினார்.

அமீன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 30 வருடம் சிறையும், குறைந்தபட்சம் ஆறு பிரம்படித் தண்டனையும் விதிக்கப்படலாம்.

‘FBI’ தனது அறிக்கையில், மலேசியா அரசு, கோலாலம்பூர் சட்டத்துறை அலுவலகம் உட்பட உள்ளூர் இணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தது. இது உலகளாவிய சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மலேசியாவின் செயல்பாட்டையும் வலியுறுத்துகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset