நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் மோதல் தீவிரம்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்

பெஷாவர்: 

பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளுக்கிடையிலான மோதல் ஏழாவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளது. துப்பாக்கிச் சூடுகளும், குண்டு வெடிப்புகளும் அதிகரித்ததால், அப் பகுதி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரம் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழி தாக்குதலுக்குப் பிறகு, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மோதல் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தெற்கு ஆசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு, தங்களது தாக்குதல் தாலிபான் ஆட்சி பகுதிகளில் மறைந்து செயல்படும் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. ஆனால் தாலிபான் இதை மறுத்துள்ளது.

பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் அரசியல் ஆலோசகர் ராணா சனாவுல்லா கூறுகையில், பெரும்பாலான இலக்குகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் நடவடிக்கை இன்னும் தொடர்வதாகவும் தெரிவித்தார். ரமலான் நோன்பு திறக்கும் நேரத்திலும் தாக்குதல்கள் நடைபெறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக சுமார் 1,500 குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்த வெளிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset