நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாய் அருகே பிளஸ் நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியது

நீலாய்:

நீலாய் அருகே உள்ள பிளஸ் நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியது.

நேற்று மாலை சிரம்பானில்  வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 287 கிலோ மீட்டரில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மாலை 6.30 மணி முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கிச் செல்லும் நான்கு வழிச் சாலை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் காட்டுகின்றன.

இந்த நிலைமை நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல மணி நேரம் சிக்கித் தவித்தது.

சாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக காஜாங்கிலிருந்து நிலாய் வரை 12 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பிளஸ் ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அனைத்து பாதைகளும் தடைபட்டன.

நீலாயிலிருந்து பாங்கி வரையிலான 5 கி.மீ தூரத்திற்கு அவசர பாதை மற்றும் இடது வடக்கு நோக்கிய பாதை தடைபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset