நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயிற்சி தகராறு வன்முறையாக மாறியது: எட்டு பேருக்கு எதிராக இராணுவ வீரர் வழக்கு தொடுத்துள்ளார்

கோத்தா பாரு: 

கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி, மலேசிய இராணுவத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வீரர் முஹம்மத் ருஸ்யாரி ஜலானி, எட்டு பேருக்கு எதிராக இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நான்கு இராணுவ வீரர்கள், 16-ஆம் மலாய் இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, எட்டாவது காலாட்படை பிரிகேட் தளபதி, மலேசிய தரைப்படை, மலேசிய அரசாங்கம் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர் ஷஹாருதீன் முஹம்மத் தெரிவித்ததாவது, 2023 மார்ச் 13 முதல் 15 வரை நடந்த பயிற்சியின் போது, அணிவகுப்பு செயல்திறனில் திருப்தியில்லாததால் வயிற்றில் குத்தியதுடன் இராணுவத் தொப்பியாலும் துடைப்புக் கம்பியாலும் தலையில் அடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் கடுமையான காயம் அடைந்த முஹம்மத் ருஸ்யாரி பலமுறை வாந்தி எடுத்த நிலையில் இராணுவ மருத்துவ மையத்திலும் பின்னர் மாச்சாங் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். பின்னர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனை (HUSM) குபாங் கெரியனில், தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எட்டு நாட்கள் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நீண்டகால மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டதுடன், மலாக்கா உள்ளிட்ட மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை காலத்தில் அவர் இராணுவ பணிகளை மேற்கொள்ள முடியாமல் குடும்பத்தினரின் பராமரிப்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset