செய்திகள் உலகம்
பயணிகளின் தங்குமிட, உணவுச் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்: ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவிப்பு
துபாய்:
மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முடியாமல் உள்ள பயணிகளின் செலவுகளை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் அறிவித்துள்ளது.
கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
சுமார் 20,200 பயணிகள் தற்போது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
அவர்களுக்கான தங்குமிட, உணவுச் செலவுகளை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் கூறியது.
அத்தகைய பயணிகளுக்காகத் துபாயில் உள்ள சில தங்குவிடுதிகள், கார் நிறுத்துமிடங்களில் நூற்றுக்கணக்கான மெத்தைகள் வைக்கப்பட்டுள்ளன.
3 வேளை உணவும் வழங்கப்படுகிறது.
பயணிகளைப் பத்திரமாக அந்தந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்ப விமான நிலையங்களுடனும் தேசிய விமான நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வேறு விமானங்களில் அவர்கள் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் கவனித்து வருவதாகக் கூறப்பட்டது.
ஆதாரம்: கலீஜ் டைம்ஸ்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 4:15 pm
மஷாத்தின் சொந்த ஊரான ஷியா கல்லறையில் கமெனி அடக்கம் செய்யப்படுவார்
March 4, 2026, 2:43 pm
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
March 4, 2026, 12:58 pm
பேருந்து கண்ணாடியை உடைத்து, ஓட்டுநர் இருக்கையைக் கைப்பற்ற முயன்ற இளைஞர் கைது
March 4, 2026, 12:22 pm
சிங்கப்பூரில் பணி ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு
March 4, 2026, 11:02 am
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு; அணு மையம் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
March 4, 2026, 10:14 am
முன்தாக்குதலா? முன்னெச்சரிக்கையா? ; அமெரிக்க தீர்மானத்தின் பின்னணி குறித்து கேள்விகள்
March 3, 2026, 11:32 pm
ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்
March 3, 2026, 10:38 pm
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
March 3, 2026, 10:19 pm
