செய்திகள் உலகம்
பேருந்து கண்ணாடியை உடைத்து, ஓட்டுநர் இருக்கையைக் கைப்பற்ற முயன்ற இளைஞர் கைது
ஹாங்காங்:
28 வயதுடைய ஒரு ஆடவர், தாம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறிக்கொண்டு, இரட்டை மாடி பேருந்தைக் கைப்பற்ற முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நார்த் பாயிண்ட், பகுதியில் இடம்பெற்றது.
மாலை சுமார் 6.45 மணியளவில், பேருந்தின் மேல்தளத்தில் இருந்த பயணி ஒருவர், ஒரு நபர் அவசர சுத்தியைக் கொண்டு பின்புற வலது கண்ணாடியை உடைத்ததாக ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி, பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்டார்.
ஆனால் சேதமடைந்த கண்ணாடியை பார்வையிடும் வேளையில், சந்தேகநபர் திடீரென ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கைபிரேக்கை விடுவித்தார். இதனால் பேருந்து பின்நோக்கி சென்று பின்னால் நின்றிருந்த மற்றொரு பேருந்துடன் மோதியது.
பின்னர் அவர் மேல்தள ஜன்னல் வழியாக குதித்து வெளியேறினார். தப்பிச் செல்ல முயற்சி செய்யாத நிலையில், அருகிலிருந்த வங்கி முன்பாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்படும் போது, அவர் தெளிவற்ற முறையில் பேசியதுடன், மன உளைச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளவரைப் போல இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது கைகளில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும், தாம் எய்ட்ஸ் நோயாளி எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 4:15 pm
மஷாத்தின் சொந்த ஊரான ஷியா கல்லறையில் கமெனி அடக்கம் செய்யப்படுவார்
March 4, 2026, 2:43 pm
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
March 4, 2026, 2:19 pm
பயணிகளின் தங்குமிட, உணவுச் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்: ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவிப்பு
March 4, 2026, 12:22 pm
சிங்கப்பூரில் பணி ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு
March 4, 2026, 11:02 am
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு; அணு மையம் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
March 4, 2026, 10:14 am
முன்தாக்குதலா? முன்னெச்சரிக்கையா? ; அமெரிக்க தீர்மானத்தின் பின்னணி குறித்து கேள்விகள்
March 3, 2026, 11:32 pm
ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்
March 3, 2026, 10:38 pm
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
March 3, 2026, 10:19 pm
