நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறார்களை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்யவில்லை: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறார்களை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்யவில்லை.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

கடந்த பிப்ரவரி 15 அன்று சொஸ்மா சட்டத்தின் கீழ்  குற்றப் புலனாய்வுத் துறை சிறார்களைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இல்லை.

சுவாராம் குற்றம் சாட்டிய தேதியில் 17 வயது நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான எந்தப் பதிவும் இல்லை என்று மதிப்பாய்வில் கண்டறியப்பட்டது,

இந்த விளக்கம் குறிப்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.

அதே வேளையில் கடந்த்அ பிப்ரவரி 15 ஆம் தேதி 17 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டதாக எந்த பதிவும் இல்லை.

இருப்பினும் சொஸ்மாவின் கீழ் கைது செய்து விசாரிக்க அதிகார வரம்பைக் கொண்ட போலிஸ் பிற துறைகள் உள்ளன  என்று அவர் கூறினார்.

முன்னதாக, தொடர்புடைய சட்டத்தின் கீழ் குறைந்தது ஆறு சிறார்களாவது தற்போது காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுவாராம்  கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset