நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய குடும்பக் கட்சிக்கு டத்தோஸ்ரீ ஹம்சா தலைமை தாங்குவார்

கோலாலம்பூர்:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின், கடந்த மாதம் பெர்சாட்டுவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதன் பின்னர், தனது அரசியல் போராட்டத்தைத் தொடர மலேசிய குடும்பக் கட்சியை வழிநடத்துவார்.

மலேசிய குடும்பக் கட்சியின் நிறுவனர் கைரி ஜெயா இதை உறுதிப்படுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் கட்சியை வழிநடத்த வழி வகுக்கும் முயற்சிகள் இதுவரை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டன என்று கூறினார்.

டத்தோஸ்ரீ ஹம்சா, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் உள்ளிட்ட பிற  பெர்சத்துவால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் இரண்டு முறை கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய கலந்துரையாடல் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலும் டத்தோஸ்ரீ ஹம்சா மலேசிய குடும்பக் கட்சியைக் கைப்பற்றுவார் என்பது 90 சதவீதம் உறுதியாக உள்ளது என்று கூறலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset